search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை விமானநிலையம்"

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Sarathkumar
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களை பிடித்துள்ள கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

    கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

    கர்நாடக தேர்தலில் முன் கூட்டியே சரியான கூட்டணி அமைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

    தற்போது தமிழகம் முழுவதும் மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. இதனால் மண்வளம், நீர்வளம் பாதிக்கப்பட்டு உள்ளன. தண்ணீர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.


    வருங்காலத்தில் தண்ணீருக்காக போர் ஏற்படும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் குறையிருந்தால் அதனை சமத்துவ மக்கள் கட்சி தைரியமாக சுட்டிக்காட்டும்.

    2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Sarathkumar
    ×